தேசியம்
செய்திகள்

கனேடிய நிறுவனங்களும் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்: கனேடிய புலனாய்வு நிறுவனம் வலியுறுத்தல்

அனைத்து கனேடிய நிறுவனங்களும் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த CSE எனப்படும் கனேடிய புலனாய்வு நிறுவனம் வலியுறுத்துகிறது.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததை அடுத்து அனைத்து கனேடிய நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் இணைய  பாதுகாப்பை வலுப்படுத்தவும் CSE வலுவாக ஊக்குவிக்கிறது.

ரஷ்யாவை தளமாகக் கொண்ட இணைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு மின் நிறுவனங்கள், வங்கிகள், கனடாவின் உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தின் பிற முக்கிய கூறுகளை CSE எச்சரிக்கிறது.

நிதி, எரிசக்தித் துறைகள் உட்பட முக்கியமான உள்கட்டமைப்புகளில் இணைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளை CSE அவதானித்து வருவதாக அதன் இணைத் தலைவரான Dan Rogers கூறினார்.

Related posts

17 மாதங்களின் பின்னர் கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் அமெரிக்கர்கள்!

Gaya Raja

நான்கு வருடங்களில் வரவு செலவுத் திட்டத்தை சமநிலைப்படுத்த Ontario Liberal கட்சி உறுதி

Lankathas Pathmanathan

Nova Scotia மாகாண Conservative வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்!

Gaya Raja

Leave a Comment