தேசியம்
செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் பயணிகள் விமான தடை June 21 வரை நீட்டிப்பு

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்  இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கான  தடையை  June 21 வரை நீடிக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra  இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து நேரடி வணிக மற்றும் தனியார் விமானங்களுக்கும் மத்திய அரசு தனது தடையை நீட்டித்துள்ளது. இந்த பயணிகள் விமானங்களுக்கான  30 நாள் தடை முதலில் April  மாதம் 22ஆம் திகதி விதிக்கப்பட்டது.

அமெரிக்க எல்லை வழியாக அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடையை June மாதம் 21ஆம் திகதி  வரை கனடா அரசாங்கம் நீட்டித்தது. அதேபோல் வெளிநாட்டவர்கள்  கனடாவுக்குள் நுழைவதும்  June மாதம் 21ஆம் திகதி   வரை  தடை செய்யப்பட்டுள்ளது.

Related posts

2023-24 ஆம் ஆண்டின் பற்றாக்குறை $61.9 பில்லியன்

Lankathas Pathmanathan

முன்னாள் அமைச்சர் Chuck Strahl மரணம்

Lankathas Pathmanathan

கனடாவின் பெரும்பகுதிக்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ள கடுமையான குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment