தேசியம்
செய்திகள்

கனடாவில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் நெடு நடை பயணம் தொடர்கிறது !

கனடாவில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் நெடு நடை பயணம் திங்கள்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது Barrie நகரிலிருந்து Toronto நகர் வரை நடை பெறும் இந்த நடை பயணம் ஞாயிற்றுக்கிழமை Barrie நகரசபையில் ஆரம்பமானது. இரண்டாவது நாள் Innisfil நகரில் ஆரம்பமான நடை பயணம் Yonge வீதி ஊடாக நகர்ந்து Brandford நகரில் முடிவடைந்துள்ளது.இந்த நடை பயணம் வியாழக்கிழமை Torontoவை வந்தடையவுள்ளது .

இந்த நடை பயணத்தின் இறுதியில் கனடிய மத்திய அரசுக்கும் Ontario மாகாண அரசுக்கும், இந்திய, பிரித்தானிய தூதுவராலயங்களுக்கும், ஐ.நா சபையின் கனடா துணை அலுவலகத்துக்கும் மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.

Related posts

வெளிநாட்டு குறுக்கீட்டு பங்கேற்பாளர்களின் பெயர்களை வெளியிடுவதில் கட்சிகளிடையே உடன்பாடு இல்லை

Lankathas Pathmanathan

கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 200,000 வேலைகளை இழந்துள்ளது

Lankathas Pathmanathan

Omicron பரவல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மாகாணங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment