தேசியம்
செய்திகள்

கனடாவில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் நெடு நடை பயணம் தொடர்கிறது !

கனடாவில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் நெடு நடை பயணம் திங்கள்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது Barrie நகரிலிருந்து Toronto நகர் வரை நடை பெறும் இந்த நடை பயணம் ஞாயிற்றுக்கிழமை Barrie நகரசபையில் ஆரம்பமானது. இரண்டாவது நாள் Innisfil நகரில் ஆரம்பமான நடை பயணம் Yonge வீதி ஊடாக நகர்ந்து Brandford நகரில் முடிவடைந்துள்ளது.இந்த நடை பயணம் வியாழக்கிழமை Torontoவை வந்தடையவுள்ளது .

இந்த நடை பயணத்தின் இறுதியில் கனடிய மத்திய அரசுக்கும் Ontario மாகாண அரசுக்கும், இந்திய, பிரித்தானிய தூதுவராலயங்களுக்கும், ஐ.நா சபையின் கனடா துணை அலுவலகத்துக்கும் மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளன.

Related posts

கனடாவின் நிதி நிறுவனங்கள் பாதுகாப்பாக உள்ளன – நிதி அமைச்சர் உறுதி

நகரசபை பதவிகளுக்கான வேட்பாளர் பதிவு ஆரம்பம்

Lankathas Pathmanathan

கனடிய ஆளுநர் நாயகத்திற்கு ரஷ்யா தடை

Lankathas Pathmanathan

Leave a Comment