Quebec இறையாண்மை பொது வாக்கெடுப்பு நடத்த $130 மில்லியன் செலவாகும் என் தெரிவிக்கப்படுகிறது.
Parti Québécois (PQ) கட்சித் தலைவர் Paul St-Pierre Plamondon இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Quebec மாகாணத்தில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், திட்டமிட்டபடி 2029 அல்லது 2030-ஆம் ஆண்டில் இறையாண்மை தொடர்பான பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அவர் கூறினார்.
இதற்கு குறைந்தபட்சம் $130 மில்லியன் செலவாகும் என PQ தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாகாண தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த நிதி மதிப்பீட்டை Paul St-Pierre Plamondon வெளியிட்டுள்ளார்.
இதில் ஆராய்ச்சி, கலந்தாய்வுக்கு $20 மில்லியன், வாக்குப்பதிவு நடத்த $110 மில்லியன் செலவாகும் என எதிர்வு கூறப்படுகிறது.
எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என PQ தலைவர் தெரிவித்தார்.
இந்த விபரங்கள் அனைத்தும், வரவிருக்கும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ள தேர்தல் நிதிநிலை அறிக்கையில் உள்ளடக்கப்படும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump பதவிக்காலம் முடிந்த பின்னர் இந்தப் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதில் தங்களது கட்சி உறுதியாக உள்ளதாகவும் Paul St-Pierre Plamondon தெரிவித்தார்.
தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், கனடா உறவுகளுக்கான அமைச்சகத்தை (Minister of Canadian relations) கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக Quebec சுதந்திரச் செயல் பாடுகளுக்கான தனி அமைச்சகத்தை (Minister responsible for the independence process) உருவாக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Quebec மாகாண தேர்தல் October 5 நடைபெற உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
