Nova Scotia மாகாணத்தின் Cape Breton பிராந்தியத்தில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
Atlantic மாகாணங்களான Nova Scotia, Prince Edward Island ஆகியவற்றின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
200 mm மழை பெய்ததால் அங்கு சாலைகள் அடித்துச் செல்லப்படுதல், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
“இந்தக் கடுமையான புயலானது Cape Breton பகுதி மக்களுக்கும், அங்குள்ள சாலை, பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது” என Nova Scotia-வின் பொதுப்பணித்துறை அமைச்சர் Fred Tilley தெரிவித்துள்ளார்.
பலத்த காற்றுடன் கூடிய கன மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்து மின் கம்பிகள் மீது விழுந்ததில், Nova Scotia மாகாணம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான வீடுகள், வணிக நிறுவனங்கள் மின்சாரத்தை இழந்து இருளில் மூழ்கியுள்ளது.
காற்றின் காரணமாக பல்வேறு பொதுப் போக்குவரத்துச் சேவைகளும், படகுப் போக்குவரத்தும் (Ferry services) தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், மின்சார விநியோகத்தை விரைவாக மீட்டெடுக்கவும் அவசரக்கால மீட்புக் குழுவினர், பொறியாளர்கள் மாகாணம் முழுவதும் தீவிரமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் உள்ளூர் அவசர காலப் பணியாளர்களுக்கு அதிகாரிகள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் பிரதமர் Mark Carney ஒரு பொது அறிக்கையை வெளியிட்டார்.
மத்திய அரசாங்கம் மாகாண அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதையும், உதவிகளை வழங்க தயாராக இருப்பதையும் பிரதமர் உறுதிப்படுத்தினார்.
