நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன கனடியர்களின் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது.
சீனா, நேபாளம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு மிக்க திடீர் வெள்ளத்தில் 30 கனடியர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெள்ளப் பெருக்கில் வியாழக்கிழமை (27) நிலவரப்படி குறைந்தது 353 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 1,300-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
புதன்கிழமை (26) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் காரணமாக நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், தொழிலாளர்கள் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடிய பிரதமர் Mark Carney, வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் தமது ஆதரவை தெரிவித்தனர்.
சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக கூறிய அமைச்சர் அனிதா ஆனந்த், தேவைக்கேற்ப உதவிகளை வழங்க கனடா தயாராக உள்ளதாகவும் கூறினார்.
அங்கு பாதிக்கப்பட்டுள்ள கனடியர்களுக்கு உதவ தமது உள்ளூர் அதிகாரிகள் தயாராக உள்ளதாகவும் கனடிய வெளிவிவகார அமைச்சின் ஒரு அறிக்கை தெரிவித்தது.
