போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக Air கனடா நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
Montréal-Pierre Elliott Trudeau சர்வதேச விமான நிலையம் வழியாக போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக Air கனடா நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
RCMP இந்தக் கைது குறித்து புதன்கிழமை (26) காலை அறிவித்தது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக Montreal பெரும்பாகத்தில் உள்ள இரண்டு வீடுகள், ஒரு வாகனத்தில் தேடுதல் நடவடிக்கைகள் புதன் காலை முன்னெடுக்கப்பட்டன.
“Air கனடாவின் ஒத்துழைப்புடன், Dorva-லில் அமைந்துள்ள விமான நிறுவன ஊழியர்களின் பணித் தளத்திலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என RCMP குறிப்பிட்டது.
இந்த இரு சந்தேக நபர்களும் Air கனடா நிறுவனத்தின் தரைவழிச் செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு பதவிகளை வகிக்கின்றனர்.
இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக RCMP கூறியது.
