அமெரிக்க ஜனாதிபதியும் கனடிய பிரதமரும் தொலைபேசியில் உரையாடினர்.
அமெரிக்க ஜனாதிபதியின் சுங்கவரி தொடர்பான காலக்கெடுவுக்கு முன்னதாக, திங்கட்கிழமை (17) மாலை இரு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் உரையாடினர்.
இந்த உரையாடல் “தற்போது நடைபெற்று வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகள்” குறித்தது என்பதைத் தவிர, பிரதமர் Mark Carney அலுவலகம் வேறு எந்த விவரங்களையும் வழங்கவில்லை.
Donald Trump விதித்துள்ள நிர்வாக உத்தரவின் காரணமாக, 50 சதவீத வரி விதிப்பு புதன்கிழமை (19) நள்ளிரவுக்குப் பின்னர் அமுலுக்கு வர உள்ளது.
அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தக பேச்சுவார்த்தைகளை “மிகவும் தீவிரமானவை, நுட்பமானவை” என Mark Carney திங்களன்று விவரித்தார்.
புதிய சுங்கவரிகள் விதிக்கப்பட்டால், “எல்லாவிதமான சூழல்களையும் எதிர்கொள்ள” கனடிய அரசாங்கத்திடம் திட்டங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார்.
தவிரவும் திங்களன்று கனடிய அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் மீண்டும் சந்தித்தனர்.
“எங்கள் பணி இன்னும் முடியவில்லை? என பேச்சுவார்த்தையின் முடிவில் கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc செய்தியாளர்களிடம் கூறினார்.
ஒரு இணைக்கத்திற்காக “நாங்கள் தொடர்ந்து பணியாற்ற உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
