‘தீயால் சூழப்பட்ட’ தனது இருப்பிடத்தில் இருந்து வெளியேற மறுத்த ஒருவரை British Colombia-வின் காட்டுத்தீயை எதிர்க்கும் குழுவினர் மீட்டனர்.
British Colombia மாகாணத்தின் Clinton கிராமத்தில் காட்டுத்தீயின் ஆபத்து தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு தனது இடத்திலிருந்து வெளியேற மறுத்து வந்தவரின் இல்லம் தீயால் சூழப்பட்டு அவரினால் வெளியேற முடியாத நிலை தோன்றிய போது அவரை காட்டுத்தீயை எதிர்க்கும் குழுவினர் மீட்டனர்.
இந்த நிலையில் காட்டுத்தீ தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மட்டுமே வெளியேற்ற உத்தரவு பகுதியில் இருக்க வேண்டும் என Thompson-Nicola பிராந்திய அவசர கால செயல்பாட்டு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறினர்.
அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு நிலைமை குறித்து தெரிவிப்பதற்காக புதன்கிழமை (29) பிற்பகல் நடைபெற்ற ஒரு மெய்நிகர் கூட்டத்தில் இந்த கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
Clinton கிராமத்தில் மேலும் இழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
