Toronto துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்தனர்; ஐவர் கைது செய்யப்பட்டனர்.
Toronto கடற்கரைப் பகுதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மூன்று பேரை மீட்டதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது.
ஏற்பட்டுள்ள காயங்கள் அனைத்தும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காதவை என கருதப்படுகிறது.
விசாரணை தொடரும் நிலையில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
