தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விலை அதிகரிக்குமா?

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விலை இந்த வாரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானுடனான யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அறிவித்துள்ள நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு எதிர்வு கூறப்படுகிறது.

Toronto பெரும்பாக பகுதியில் வெள்ளிக்கிழமை (10) எரிபொருளின் விலை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளியன்று petrol விலை litre 5 சதம் உயர்ந்து 169.9 சதமாகவும், diesel விலை  litre 13 சதம் வரை உயர்ந்து 198.9 சதமாகவும் இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

தொடர்ந்து வார இறுதிக்குள் எரிபொருள் விலைகள் மேலும் ஐந்து சதம் அல்லது அதற்கும் அதிகமாக உயரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் எரிபொருளின் விலையில் படிப்படியான உயர்வு இருக்கும் எனவும், ஒரு litre சராசரியாக 10 முதல் 15 சதம் வரை விலை அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

கனடாவில் வெளியான தமிழின படுகொலை குறித்த நூல்

Lankathas Pathmanathan

கனடிய ஆளுநர் நாயகத்திற்கு ரஷ்யா தடை

Lankathas Pathmanathan

ஆரம்பமாகும் Ontario மாகாணசட்டமன்றஅமர்வுகள் : ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு வற்புறுத்தும் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்திற்கு உடனடித் திட்டங்கள் இல்லை!

thesiyam

Leave a Comment