தேசியம்
செய்திகள்

தற்காலிக ஒப்பந்தத்திற்கு ஆதரவாக கனடா Post ஊழியர்கள் வாக்களித்தனர்

தற்காலிக ஒப்பந்தத்திற்கு ஆதரவாக கனடா Post ஊழியர்கள் வாக்களித்தனர்.

85.9 சதவிகித கனடா Post ஊழியர்கள் தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்க வாக்களித்துள்ளனர்.

55,000 தபால் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய தபால் ஊழியர் சங்கம் (CUPW) இந்த அறிவித்தலை திங்கட்கிழமை (01) வெளியிட்டது.

சுமார் 86 சதவீத கிராமப்புற, புறநகர் தபால் ஊழியர்கள் ஒப்பந்தத்தை ஏற்க வாக்களித்ததாகவும், 89 சதவீத நகர்ப்புற ஊழியர்கள் இதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் தொழிற்சங்கம் தெரிவிக்கிறது.

கனடா Post நிறுவனத்திற்கும் தபால் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு இந்த வாக்கெடுப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

December 2025-இல் எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்குத் தங்கள் உறுப்பினர்கள் பெருவாரியாக ஆதரவாக வாக்களித்ததாக CUPW தெரிவித்தது.

Related posts

பணவீக்க விகிதம் அதிகரித்தது!

Lankathas Pathmanathan

Ontario மிக மோசமான சூழ்நிலையைத் தவிர்த்துள்ளது

Lankathas Pathmanathan

Venezuela: அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடியர்களுக்கு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment