சர்வதேச துடுப்பாட்ட சபையில் இருந்து கனடாவின் உறுப்புரிமை இடை நீக்கம் செய்யப்பட்டது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த முடிவை சர்வதேச துடுப்பாட்ட சபை எடுத்துள்ளது.
உறுப்புரிமை கடமைகளை கடுமையாக மீறியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படுவதாக சர்வதேச துடுப்பாட்ட சபை அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை (01) இந்த இடை நீக்க அறிவித்தலை சர்வதேச துடுப்பாட்ட சபை வெளியிட்டது.
கனடிய துடுப்பாட்ட வீரர்கள் நலன்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், தேசிய நிர்வாக அமைப்பை பாதிக்கும் நிர்வாகச் சிக்கல்களால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சர்வதேச துடுப்பாட்ட சபை கூறியது.
இந்த தடைகாலத்தின் போது கனடிய துடுப்பாட்ட வீரர்கள் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
