Alberta கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர வேண்டுமா என்பது குறித்து அந்த மாகாணத்தின் வாக்காளர்கள் விரைவில் வாக்களிக்க உள்ளனர்.
முதல்வர் Danielle Smith இந்த அறிவித்தலை பிரத்தியேக தொலைக்காட்சியில் உரையில் வியாழக்கிழமை (21) வெளியிட்டார்.
கனடாவில் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து Alberta பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளது.
எதிர்வரும் இலையுதிர் காலத்தில் இந்த வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இந்த மாகாண பொது வாக்கெடுப்பு October 19 -ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் Danielle Smith தெரிவித்தார்.
இலையுதிர் காலத்தில் நடைபெற இருக்கும் பொது வாக்கெடுப்பில் பிரிவினை குறித்த ஒரு கேள்வியை இணைக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக முதல்வர் அறிவித்தார்.
Alberta மாகாணம் கனடாவுடன் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பிரிவினை குறித்த இரண்டாவது கட்டாய வாக்கெடுப்பை நடத்த வேண்டுமா என்பது குறித்து ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தவுள்ளது.
இது பல ஆண்டுகளில் கனடாவின் ஒற்றுமைக்கு ஏற்படும் முதல் குறிப்பிடத்தக்க சோதனையாக அமைகிறது.
வெற்றி பெற்ற மத்திய ஆதரவு Forever Canadian மனு, நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட Stay Free Alberta மனு ஆகிய இரண்டின் கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு புதிய கேள்வியை, October 19 நடைபெற இருக்கும் மாகாண பொது வாக்கெடுப்பில் தனது அரசாங்கம் இணைக்க உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் Alberta மாகாணத்தின் சுதந்திரம் குறித்து இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பதையும் இந்த வாக்கெடுப்பின் போது வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
இந்த நிலையில் Alberta கனடாவுடன் இணைந்திருப்பதை தான் ஆதரிப்பதாக முதல்வர் Danielle Smith கூறினார்.
மாகாண பொது வாக்கெடுப்பில் பிரிவினைக்கு தானும், தனது கட்சியும், தனது அரசாங்கமும் அவ்வாறே வாக்களிக்கும் எனவும் அவர் கூறினார்.
தனது தனிப்பட்ட ஆதரவு நிலைப்பாட்டை தவிர்த்து, நூறாயிரக்கணக்கான Alberta மக்களின் ஜனநாயக உரிமைகளில் தலையிடும் ஒரு தவறான நீதிமன்றத் தீர்ப்பால் மிகவும் கலக்கமடைந்துள்ளதாக Danielle Smith தெரிவித்தார்.
Alberta மாகாணத்தின் எதிர்காலத்தை நீதிமன்றங்கள் அல்லாமல், அந்த மாகாணத்தின் மக்களால் தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.
பிரிவினை கோரி குடிமக்கள் முன்னெடுத்த மனு ஒன்று, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான கையொப்பங்களைச் சேகரித்தது.
Alberta கனடாவுடன் இணைந்திருக்க வேண்டும் என வாதிடும் ஒரு தனி மனு 4 லட்சத்திற்கும் அதிகமான கையொப்பங்களை பெற்றது.
கனடிய மத்திய அரசாங்கத்தின் முடிவுகளினால் Alberta புறக்கணிக்கப்படுகிறது என்ற நீண்டகால உணர்வின் அடிப்படையில், எண்ணெய் வளம் நிறைந்த மாகாணத்தில் பிரிவினைவாத கோரிக்கை வளர்ந்து வருகிறது.
Quebec மாகாணம் பிரிவினைக்கு எதிராக இரண்டு முறை வாக்களித்துள்ளது.
இறுதியாக 1995-இல் நடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பிரிவினை தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
