கனடிய கப்பல் பயணிக்கு Hanta தொற்று இருப்பது ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பரவலின் மையமாக இருந்த MV Hondius சொகுசுக் கப்பலில் பயணம் செய்த கனடியர் ஒருவருக்கு Hanta தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என ஆய்வகம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.
British Colombia மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கனடிய கப்பல் பயணிக்கு தொற்றின் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தேசிய ஆய்வகம் உறுதி செய்துள்ளது.
ஆனால் இந்த தொற்று மேலும் பரவுவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கனடிய சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உறுதிசெய்யப்பட்ட தொற்று உள்ளவருடன் பயணம் செய்த இரண்டாவது நபருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்தது என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இவர்கள் இருவரும் Yukon குடியிருப்பாளர்கள் என தெரியவருகிறது.
MV Hondius கப்பலில் இருந்த மொத்தம் நான்கு கனடியர்கள் நேரடியாக Vancouver தீவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு அறிகுறிகள் தென்பட தொடங்கின.
இந்த நான்கு பேரில் மூன்று பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நான்காவது நபர் வீட்டில் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் British Colombia சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை (16) தெரிவித்தனர்.
இதுவரை, கனடாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட, உலகளாவிய ரீதியில் 12 Hanta தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குறைந்த ஆபத்து உடையவர்களாகக் கருதப்பட்ட 26 பேர், அறிகுறிகள் தென்படுகிறதா எனக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக கனடாவின் தலைமைப் பொது சுகாதார அதிகாரி வியாழக்கிழமை (14) தெரிவித்தார்.
அதேவேளையில், Yukon தம்பதியினர் உட்பட மேலும் ஒன்பது பேர் அதிக ஆபத்து உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டனர்.
Ontario, Alberta, British Colombia மாகாணங்களில் உள்ள அதிக ஆபத்துள்ள நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
