Markham நகரசபை தேர்தலில் இரண்டாவது தமிழர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.
பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.
இதில் Markham நகரசபையின் 5-ஆம் வட்டார தேர்தலில் போட்டியிட தமிழரான தாமிரா ரஜிகரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தத் தொகுதியில் போட்டியிட இம்முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதலாவது தமிழர் இவராவார்.
தாமிரா ரஜிகரன் தேர்தல் அரசியலில் போட்டியிடுவது இதுவே முதல் தடவையாகும்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற நகரசபை தேர்தலில் இந்தத் தொகுதியில்தமிழரான ஸ்ரீ சிவசுப்ரமணியம் போட்டியிட்டு 1,372 வாக்குகளை பெற்றிருந்தார்.
2018 தேர்தலில் இந்தத் தொகுதியில் தமிழர்களான ஸ்ரீ சிவசுப்ரமணியம் (682 வாக்குகள்), ஜெரேமியா விஜேயரட்ணம் (491 வாக்குகள்) ஆகியோர் போட்டியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
