பயங்கரவாதக் குழுவை ஊக்குவித்ததாக Quebec நகர நபர் ஒருவர் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
Quebec நகரை சேர்ந்த 26 வயதான Jeffrey Roussel என்பவரை RCMP கைது செய்துள்ளது.
இளைஞர்களைத் தீவிரமயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பயங்கரவாதக் குழுவின் (764 பயங்கரவாத குழு) சித்தாந்தத்தைப் பரப்பியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பதின்ம வயதினர் தங்கள் குழுவில் இணைக்க முயன்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்ட அவரது Quebec நகரில் உள்ள இல்லத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பின்னர், புலனாய்வாளர்கள் அங்கிருந்து ஒரு மடிக்கணினி, இரண்டு கைபேசிகளை பறிமுதல் செய்தனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக அவர் புதன்கிழமை (22) Quebec நகர நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டார்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
