September 16, 2026
தேசியம்
செய்திகள்

நான்கு வளைகுடா நாடுகளுக்கான நாடு கடத்தலை இடை நிறுத்திய CBSA

நான்கு வளைகுடா நாடுகளுக்கான நாடு கடத்தலை CBSA இடை நிறுத்தியுள்ளது.
தொடரும் மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக இந்த முடிவை கனடிய எல்லை சேவைகள் முகமையகம் (The Canada Border Services Agency – CBSA) எடுத்துள்ளது.
ஈரானில் நடைபெறும் போர் காரணமாக, கனடாவிற்குள் நுழைய அனுமதி அற்றவர்களை நான்கு வளைகுடா நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கு தற்காலிகத் தடை விதித்துள்ளதாக CBSA அறிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates – UAE), குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளுக்கான நாடு கடத்தல்கள் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன CBSA செவ்வாய்க்கிழமை (24) வெளியியான ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
“இந்த நாடுகளில் நிலவும் நிலையற்ற, கணிக்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என அந்த அறிக்கை  தெரிவித்தது.
மத்திய கிழக்கின் பெரும்பகுதிக்கும் பரவியுள்ள மோதலின் காரணமாக, இந்த மாத ஆரம்பத்தில் இஸ்ரேல், லெபனானுக்கான நாடு கடத்தல்களை நிறுத்தி வைக்க CBSA இதேபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Montreal, Quebec City நகர முதல்வர்கள் திறமையற்றவர்கள்: Pierre Poilievre

Lankathas Pathmanathan

Montreal நகரின் பனிப்புயல் முன்னறிவிப்பை தவறாக கணித்த சுற்றுச்சூழல் திணைக்களம்?

Lankathas Pathmanathan

பிரதமரை அச்சுறுத்திய குற்றத்தை ஒருவர் ஒப்புக் கொண்டார்!

Lankathas Pathmanathan

Leave a Comment