Toronto பெரும்பாக யூதர் வழிபாட்டுத் தலங்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை உறுதியளித்தது.
இந்த வன்முறைக்கு மத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.
North York யூத வழிபாட்டு தலத்திற்கு வெளியே காவல்துறையினரும் அரசியல் தலைவர்களும் ஞாயிற்றுக்கிழமை (08) காலை கூடினர்,
வார இறுதியில் இரண்டு GTA யூதர் வழிபாட்டுத் தலங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் இவை குறித்த விசாரணைக்கும், யூத சமூகங்களுக்கு வலுவான பாதுகாப்புகக்கும் உறுதியளிக்கப்பட்டது.
புலனாய்வாளர்கள் இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதை Toronto காவல்துறைத் தலைவர் Myron Demkiw, York பிராந்திய காவல்துறை துணைத் தலைவர் Kevin McCloskey ஆகியோர் கூறினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் யூத எதிர்ப்பு வன்முறையின் கவலையளிக்கும் அதிகரிப்பின் ஒரு பகுதியாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்தார் .
வெறுப்பு குற்றங்களுக்கு எதிராக மத்திய அரசு காவல்துறை, அரசாங்கத்தின் ஏனைய பிரிவுகளுடன் தொடர்ந்து பணியாற்றும் எனவும் அமைச்சர் கூறினார்.
இந்த துப்பாக்கிச் சூடுகளை “யூத எதிர்ப்பு, வெறுப்பு, மிரட்டல் ஆகியவற்றின் அருவருப்பான செயல்கள்” என Toronto நகர முதல்வர் Olivia Chow கண்டித்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் யூத சமூகத்தில் அச்சங்களை அதிகரித்துள்ள நிலையில், யூதர் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணிகள் அதிகரித்துள்ளது.
