தேசியம்
செய்திகள்

கனடிய வெளியுறவுத் துறையின் பிரதான பதவிக்கு தமிழர் நியமனம்

கனடிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறையின் பிரதான பதவிக்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடிய அரசாங்கத்தின் பொது சேவையின் வெளியுறவுத் துறையில் அருண் தங்கராஜ் என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை புதன்கிழமை அறிவித்தார்

போக்குவரத்து துறை அமைச்சின் பொது சேவை பதவியில் இருந்த அருண் தங்கராஜ் புதிய வெளியுறவுத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் Mark Carney பொது சேவையின் மூத்த பதவிகளில் மாற்றங்களை அறிவித்தார்.

இந்த நியமனத்தின் மூலம் கனடாவின் வெளியுறவுத் துறையின் பிரதான இரண்டு பதவிகளை தமிழர்கள் தம்வசம் கொண்டுள்ளனர்.

கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக தமிழரான அனிதா ஆனந்த் பதவி வகிக்கிறார்.

அருண் தங்கராஜ் 25 ஆண்டுகள் வரை கனடிய மத்திய அரசில் கடமையாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மாகாண அரசாங்கத்தினால் கடுமையாக விமர்சிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர்

Lankathas Pathmanathan

Omicron அலை உச்சத்தை எட்டியிருக்கலாம்: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

வேலை நிறுத்தத்தில் கனேடிய எல்லை சேவை முகமை ஊழியர்கள்!

Gaya Raja

Leave a Comment