Venezuela ஜனாதிபதியை கைது செய்த அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கனடாவில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.
Venezuela ஜனாதிபதி Nicolás Maduro அவரது மனைவியுடன் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த நிலையில் தலைநகர் Ottawa உட்பட Toronto, Winnipeg, Halifax ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
Venezuela-வில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை கண்டித்து Ottawa-வில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஆர்பாட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை (04) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Venezuela-வின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் Halifax நகரில் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர்.
Toronto நகர மையத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை கடும் குளிரின் மத்தியிலும் ஒன்று கூடி அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்தனர்.
அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மீறுவதாக கனடாவில் நாடளாவிய ரீதியில் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.
இந்தப் போராட்டங்களில் அமைதியை வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவின் தலையீட்டையும் கண்டித்தனர்.
அமெரிக்காவின் தாக்குதல் குறித்த கனடாவின் பதில் நடவடிக்கையை பல ஆர்ப்பாட்டக்காரர்கள் விமர்சித்தனர்.
கனடா சர்வதேச சட்டத்தை ஆதரித்தால், Venezuela நாட்டின் ஜனாதிபதி Nicolás Maduro என்பதால் அவரை மீண்டும் Venezuela-வுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என கோர வேண்டும் என Winnipeg அமைதி கூட்டணியின் தலைவர் வலியுறுத்தினார்.
Venezuela-விற்கு எதிரான நீண்டகால தடைகளுக்கு கனடிய மத்திய அரசாங்கம் உடந்தையாக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
LJI Reporter ரம்யா சேது
