Montreal நகரின் பனிப்புயல் முன்னறிவிப்பை தவறாக கணித்ததற்காக கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
திங்கட்கிழமை (10) இரவு Montreal நகரில் 20 CM வரை பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை என சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்தது.
இது முன்னறிவிப்பாளர்கள் கணித்ததை விட நான்கு மடங்கு அதிக பனிப்பொழிவாகும்.
எதிர்பார்த்ததை விட அதிகமான பனிப்பொழிவு தெற்கு Quebec முழுவதும் பரவலான மின் தடைகளை ஏற்படுத்தியதுடன், பல பாடசாலைகள் ல பள்ளிகள் மூடப்படுவதற்கு காரணமானது.
தவிரவும் மோசமான மீதி போக்குவரத்து நிலைமைகளுக்கு இது வழிவகுத்தது.
இந்தப் பனிப்புயலின் உச்சத்தில் 200,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் இருந்ததாக Hydro-Québec தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் வரை தொடர்ந்த பனிப்பொழிவு, Montreal நகரில் மேலும் ஐந்து CM வரை பனிப்பொழிவை ஏற்படுத்தியது.
செவ்வாய் பிற்பகல் வேளையில், சுமார் 1,000 Hydro-Québec தொழிலாளர்கள் சேவையை மீட்டெடுக்க களத்தில் இருந்தனர்.
