Quebec மாகாணம் முழுவதும் இலட்சக்கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தோன்றியுள்ளது.
Quebec மாகாணத்தின் சில பகுதிகளில் 35 CM வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
இந்த இடைவிடாத பனிப்பொழிவு காரணமாக மாகாணம் முழுவதும் இலட்சக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
பல மரக்கிளைகள் முறிந்து மின் இணைப்பை பாதித்துள்ளதாக Hydro-Québec தெரிவிக்கிறது.
செவ்வாய்க்கிழமை (11) காலை 8 மணி நிலவரப்படி, 375,600க்கும் மேற்பட்ட Hydro-Québec வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது.
இதனால் சில பாடசாலை வாரியங்கள் செவ்வாய் விடுமுறை அறிவித்துள்ளன.
