தேசிய நினைவு தின நிகழ்வில் ஆளுநர் நாயகம் Mary Simon கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நினைவு தின நிகழ்வு நாடளாவிய ரீதியில் செவ்வாய்கிழமை (11) நடைபெறவுள்ளது.
ஆளுநர் நாயகம் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்தது.
இதனால் அவர் தேசிய நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Mary Simon எந்த சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது அலுவலகம் குறிப்பிடவில்லை.
அதேவேளை எவ்வளவு காலம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விபரமும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தேசிய நினைவு தின நிகழ்வில் Mary Simon-க்குப் பதிலாக தலைமை நீதிபதி Richard Wagner கலந்து கொள்வார் என அறிவிக்கப்படுகிறது.
பிரதமர் Mark Carney உள்ளிட்ட பிரமுகர்கள் தேசிய நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்ள ஏற்பாடாகியுள்ளது.
