தேசியம்
செய்திகள்

காசா அமைதி முன்னெடுப்பு குறித்து Mark Carney நம்பிக்கை

காசா அமைதி முன்னெடுப்பு குறித்து கனடிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

காசா அமைதி முன்னெடுப்புகளுக்கு அடுத்த 48 மணி நேரம் பிரதானமானது என Mark Carney தெரிவித்தார்.

அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் காசா அமைதித் திட்டத்திற்கு எவ்வாறு  ஆதரவு வழங்க முடியும் என்பதை தனது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர்   கூறினார்.

“அடுத்த 48 மணிநேரம் மிக முக்கியமானது” என இந்த அமைதி முன்னெடுப்புகள் குறித்து வியாழக்கிழமை (09) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் Mark Carney தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கு உழைத்த அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளுக்கும் Mark Carney நன்றி தெரிவித்தார்.

Related posts

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

Lankathas Pathmanathan

அரசியலை விட்டு விலகும் எண்ணமில்லை: Melanie Joly

Lankathas Pathmanathan

மூன்று மாகாணங்களில் கொடிய நுண்ணுயிர் தொற்று!

Lankathas Pathmanathan

Leave a Comment