Portugal நாட்டின் Lisbon நகர விபத்தில் இரண்டு கனடியர்கள் மரணமடைந்தனர்.
சுற்றுலா பயணிகளிடையே பிரபலமான streetcar புதன்கிழமை (03) விபத்துக்கு உள்ளானதில் 17 பேர் பலியானதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர்.
இதில் இறந்தவர்களில் இரண்டு கனடியர்களும் அடங்குவர் என உள்ளூர் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தனர்.
இதில் பிரான்ஸ், கனடா ஆகிய இரு நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒரு பெண் இறந்ததாக பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் தூதரக சேவைகளை வழங்கி வருகின்றனர் என அவர் கூறினார்.
இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணங்கள் குறித்த ஊகிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
