ஈரானிய அதிகாரிகள் சிலர் கனடாவுக்குள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்து CBSA விசாரணை நடத்தி வருகிறது.
கனடிய எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) இதனை உறுதிப்படுத்தியது.
ஈரானிய ஆட்சியில் சந்தேகிக்கப்படும் மூத்த அதிகாரிகளுக்கு எதிரான கனடாவின் நடைமுறை தொடந்து அமுலில் உள்ளது என CBSA பேச்சாளர் Rebecca Purdy தெரிவித்தார்.
சந்தேகத்துக்கு இடமான மூத்த ஈரானிய அதிகாரிகள் கனடாவில் பாதுகாப்பான புகலிடம் பெறுவதை தடுக்க CBSA தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டில், கனடா ஈரானிய அரசாங்கத்தை “பயங்கரவாதத்திலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடும்” ஒரு நாடாக அறிவித்தது.
இந்த அறிவித்தல் எந்தவொரு மூத்த அரசாங்க அதிகாரியும் கனடாவுக்குள் நுழைவதை தடை செய்தது.
இந்தத் தடையின் கீழ், கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைகளத்தினால் visa விண்ணப்பங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் CBSA 115 விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளது.
அவற்றில், 49 விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், மீதமுள்ளவை தொடர்வதாகவும் Rebecca Purdy தெரிவித்தார்.
அதிகரித்து வரும் இஸ்ரேல்-ஈரான் பதட்டத்தின் மத்தியில் ஈரானிய ஆட்சியுடன் தொடர்புடையவர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
