நூற்றுக்கணக்கான கனடியர்கள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேறியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தொடரும் பதட்டத்தின் மத்தியில் ஆயிரக்கண கனடியர்கள் தொடர்ந்தும் அங்கு சிக்கி உள்ளனர் என அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில் இஸ்ரேல், ஈரானில் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறும் கனடியர்களுக்கு உதவ விமான சேவைகளை அரசாங்கம் ஏற்பாடு செய்கின்றது.
இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் சுமார் 6,000 கனடியர்களும் நிரந்தர குடியிருப்பாளர்களும் உள்ளனர்.
மேலும் 5,500 கனடியர்கள் ஈரானில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அங்கிருந்து வெளியேற விரும்பும் கனடியர்களுக்கு உதவுவதறகாக மத்திய அரசாங்கம் அண்டை நாடுகளிலிருந்து விமான சேவைகளை ஏற்பாடு செய்வதாக வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
