தேசியம்
செய்திகள்

ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான Tel Aviv கட்டிடத்திலிருந்து கனடிய தூதரக ஊழியர் ஒருவர் மீட்கப்பட்டார்!

ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான Tel Aviv கட்டிடத்திலிருந்து கனடியர் ஒருவர் மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.

Tel Aviv-வில் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான கட்டிடத்திலிருந்து கனடிய தூதரக ஊழியர் ஒருவர் மீட்கப்பட்டார்.

கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சனிக்கிழமை  (14) இதனை உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சருடன்,  அனிதா ஆனந்த் உரையாடியுள்ளார்.

ஈரானிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில்  தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை கனடா உறுதியாக ஆதரிக்கிறது என இந்த உரையாடலின் போது அனிதா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரையாடலின் போது, ஈரானின் சமீபத்திய தாக்குதல்களின் போது கட்டிடம் ஒன்றில் சிக்குண்டிருந்த கனடியரை வெளியேற்ற உதவிய இஸ்ரேலிய தீயணைப்பு வீரர்களுக்கு அனிதா ஆனந்த் நன்றி தெரிவித்தார்.

Related posts

அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்த மூன்று கனடிய மாகாணங்கள் முடிவு

Lankathas Pathmanathan

Ontario குடியிருப்பு பாடசாலையில் 171 சாத்தியமான மனித எச்சங்கள்

Lankathas Pathmanathan

கனடா தின கொண்டாட்டங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட எத்தனிப்பவர்களுக்கு எச்சரிக்கை

Leave a Comment