September 9, 2026
தேசியம்
செய்திகள்

உக்ரைன் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கும் கனடிய பிரதமர்

உக்ரைனில் நடைபெறும் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் பங்கேற்கிறார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த பாதுகாப்பு உச்சி மாநாடு திங்கட்கிழமை (24) நடைபெறுகிறது.
இதில் கனடிய பிரதமர் Justin Trudeauவின் வருகையை உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy உறுதிப்படுத்தினார்.
உக்ரைனின் அமைதி, பாதுகாப்பு குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் 13 வெளிநாட்டுத் தலைவர்களில் ஒருவரான Justin Trudeau அடங்குகிறார்.
ஞாயிற்றுக்கிழமை (23) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உக்ரேனிய ஜனாதிபதி இந்த பயணத்தை உறுதிப்படுத்தினார்.
ஆனாலும் கனடிய பிரதமர் அலுவலகம் இந்த பயணத்தை உறுதிப்படுத்தவில்லை.
உக்ரைன் – ரஷ்யா யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து உக்ரைனுக்கு பிரதமராக Justin Trudeau மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.
March 9 ஆம் திகதி அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ள நிலையில் அவரது இறுதி பயணமாகவும் இது அமையவுள்ளது.

Related posts

இருவரின் உடல்கள் N.S. கரையோரம் மீட்பு

Lankathas Pathmanathan

தேசிய அவசர நிலைக்கு சேமித்து வைத்திருந்த மருத்துவப் பொருட்களை உக்ரைனுக்கு வழங்கிய கனடா

Lankathas Pathmanathan

சர்வதேசப் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிப்பது: சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனை

Gaya Raja

Leave a Comment