தேசியம்
செய்திகள்

லெபனானில் சிக்கியுள்ள கனடியர்கள் வெளியேற உதவும் அரசாங்கம்

லெபனானில் சிக்கியுள்ள கனடியர்களுக்கு தொடர்ந்து உதவி வருவதாக கனடிய அரசாங்கம் தெரிவித்தது.
லெபனானில் சிக்கியுள்ள கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றும் உதவிகளை கனடிய அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
இஸ்ரேலுக்கும் லெபனானை தளமாகக் கொண்ட போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த உதவிகளை வழங்குவதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
25,000 கனடியர்கள் தற்போது லெபனானில் இருப்பதாக நம்பப்படுகிறது.
அவர்களில் சுமார் 5,000 பேர் அங்கிருந்து வெளியேற உதவி கோரியுள்ளனர்.
இவர்களில் 2,300 க்கும் மேற்பட்டவர்களை மத்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிக விமானங்களில் வெளியேற அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.

Related posts

உக்ரைன் ஆக்கிரமிப்பு காரணமாக ஜனநாயகம் ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

281 கனடியர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றம்!

Lankathas Pathmanathan

Ontarioவின் அடுத்த முதல்வராகும் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் Marit Stiles!

Lankathas Pathmanathan

Leave a Comment