தேசியம்
செய்திகள்

லெபனானில் உள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

லெபனானில் உள்ள கனடியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்படுகின்றனர்.

விமான சேவைகள் நடைமுறையில் உள்ள போது லெபனானில் உள்ள கனடியர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கோரப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் – லெபனான் போராளிக் குழுவான Hezbollahவுக்கும் இடையே அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில் இந்த கோரிக்கையை  கனடிய அரசாங்கம் முன்வைத்துள்ளது

லெபனானில் உள்ள கனடியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உதவிகள் எதுவும்  தற்போது வழங்கப்படவில்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு வெளிநாட்டிலிருந்து அரசாங்கத்தின் உதவியுடன் கனடியர்கள் வெளியேற்றப்படுவது கடைசி தேர்வாகும் எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.

லெபனானில் 45,000 கனடியர்கள் உள்ளதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார்.

Related posts

முதற்குடிகள் குழந்தைகளுடன் 20 பில்லியன் டொலர் குழந்தைகள் நல தீர்வு

Lankathas Pathmanathan

புதிய அமெரிக்க ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் வாழ்த்து

Lankathas Pathmanathan

2026 மின்சார வாகன இலக்கு இடை நிறுத்தம்!

Lankathas Pathmanathan

Leave a Comment