தேசியம்
செய்திகள்

Montreal அடுக்குமாடி கட்டிட தாக்குதலில் 2 பெண்கள் கொலை – ஒருவர் காயம்

Montreal நகருக்கு மேற்கே அடுக்குமாடி கட்டிடத்தில் பலர் கத்தியால் குத்தப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 2 பெண்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார்.

வியாழக்கிழமை காலை Montrealக்கு மேற்கே அடுக்குமாடி கட்டிடத்தில் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர் – மற்றொரு பெண் படுகாயமடைந்ததாக Quebec மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

44 வயதான சந்தேக நபர் காவல்துறையினரால் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலியானவர்களில் ஒருவர் சந்தேக நபரின் தாயார் என தெரியவருகிறது.

ஏனைய இரண்டு பெண்களும் அதே அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.

பலியானவர்கள் 68, 53 வயதுடைய இரண்டு பெண்கள் என அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மூன்றாவது பெண், 70 வயதானவர் என கூறப்படுகிறது.

இவர் ஆபத்தான நிலையில் Montreal மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரும் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

February மாதம் கனடா முழுவதும் கடுமையான குளிர்?

Lankathas Pathmanathan

நான்கு கனேடிய விமான நிலையங்களுக்கான சேவையை WestJet நிறுத்தல்

Lankathas Pathmanathan

Ontario போக்குவரத்துத்துறை இணையமைச்சராகும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment