தேசியம்
செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள், உலகத் தமிழர் இயக்கம் மீதான தடை கனடாவில் நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), உலகத் தமிழர் இயக்கம் (WTM) மீதான தடை கனடாவில் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் பயங்கரவாத அமைப்பாக 2006ஆம் ஆண்டு April மாதம் 08ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

உலகத் தமிழர் இயக்கம் கனடாவில் பயங்கரவாத அமைப்பாக 2008ஆம் ஆண்டு June மாதம் 13ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

தடை விதிக்கப்பட்ட அமைப்புகள் குறித்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு மேற்கொள்வது சட்டப்பூர்வமான தேவையாகும்.

சில வருடங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்வது வழக்கமாகும்.

கடந்த June மாதம் 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மதிப்பாய்வு செயல்முறை பின்னர்  இந்த இரண்டு அமைப்புகளின் தடையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

Related posts

கனடிய எல்லையில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தவர்களை எதிர்கொள்ளும் அமெரிக்க எல்லை காவல்துறை

Lankathas Pathmanathan

Quebecகில் ஒவ்வொருவருக்கும் $500 கொடுப்பனவு

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த யாழ் நகர முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment