தேசியம்
செய்திகள்

Quebec வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் காயம்

Quebec வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.

Montreal நகருக்கு தெற்கில் ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தின் விளைவாக நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை (01) இரவு Quebec மாகாணத்தின் St-Constant நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்திற்கான காரணங்கள் தெளிவாக தெரியவில்லை.

ஆனால் அங்கு ஒரு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவருகிறது.

காயமடைந்தவர்களின் நிலை குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்கு பயண எச்சரிக்கை

Lankathas Pathmanathan

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – அதிக பணவீக்கம் குறித்து எச்சரிக்கும் மத்திய வங்கி

Lankathas Pathmanathan

அரசு முறைப் பயணமாக கனடாவில் Swedish அரச குடும்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment