தேசியம்
செய்திகள்

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகளின் அடுத்த நீதிமன்ற விசாரணை June 25

கனடிய  சீக்கிய தலைவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்தியர்கள் சமூக உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என உத்தரவிடப்பட்டது.

British Columbia சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையின் குற்றவாளிகளான Karan Brar, Kamalpreet Singh, Karanpreet Singh, Amandeep Singh ஆகியோர் செவ்வாய்க்கிழமை (21) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இவர்களின் அடுத்த நீதிமன்ற விசாரணை June 25 வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவில் சுதந்திரமான சீக்கிய நாடு அமைப்பது குறித்து வெளிநாடுகளில் வாக்களிக்கும் முயற்சியின் முக்கிய தலைவராக  Hardeep Singh Nijjar இருந்தார்.

அவர் கடந்த ஆண்டு June மாதம் Surrey நகரில் உள்ள சீக்கிய கோவில் வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு உள்ளதாக நம்பகமான உளவுத்துறை தகவல்களை கனடிய பிரதமர் Justin Trudeau வெளியிட்டார்.

ஆனாலும் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்து வருகிறது.

Related posts

B.C. பாடசாலை துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலியானவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

ஹமாசுடன் தொடர்புடைய உதவிக் குழுவின் முன்னாள் ஊழியருக்கு நாடு கடத்தல் உத்தரவு

Lankathas Pathmanathan

10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் COVID காரணமாக வைத்தியசாலைகளில்

Lankathas Pathmanathan

Leave a Comment