தேசியம்
செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலை தணிக்க இஸ்ரேலை வலியுறுத்தும் கனடா

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களை தணிக்க இஸ்ரேலை வலியுறுத்துவதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly தெரிவித்தார்.

கடந்த வார இறுதியில் நிகழ்ந்த வான்வழித் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலை ஈரான் மீது  மேற்கொள்ள வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்

ஈரான் மீது நேரடித் தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சரிடன் கூறியதாக Mélanie Joly தெரிவித்தார்.

ஈரான் மீதான மேலதிக தடைகள் குறித்து இந்த வாரம் G7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள  வெளியுறவு அமைச்சர்களுடன் விவாதிக்கவுள்ளதாக Mélanie Joly கூறினார்

சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகம் மீது April 1ம் திகதி நிகழ்ந்த வான்வழித் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.

இந்த தாக்குதலில் மூத்த இராணுவ அதிகாரிகள் பலியாகினர்.

Related posts

400 பில்லியன் டொலர்கள் வரை பற்றாக்குறை அதிகரிக்கலாம் – நிதியமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது

வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணையை தலைமை தாங்க நீதிபதி நியமனம் ?

Lankathas Pathmanathan

Leave a Comment