தேசியம்
செய்திகள்

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை திறக்கும் கனடா

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை கனடா திறக்கிறது.

வெளியுறவு அமைச்சர் Melanie Joly புதன்கிழமை (29) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

Estonia, Lithuania, Slovakia ஆகிய நாடுகளில் இருக்கும் தூதரக அலுவலகங்களை தூதர்களுடன் முழு தூதரகங்களாக விரிவுபடுத்துவதாக அமைச்சர் Joly கூறினார்.

துருக்கியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசான ஆர்மீனியாவில் கனடா புதிய தூதரகத்தை திறக்கவுள்ளது.

ரஷ்யாவை எதிர்ப்பதற்கும், NATO நட்பு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், ஜனநாயகத்தை ஆதரிப்பதற்கும் ஒரு முயற்சியாக இந்த நகர்வு அமைகிறது.

Related posts

வாகனத் திருட்டு விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்பு – நால்வர் கைது

Lankathas Pathmanathan

பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது Chinguacousy பூங்கா

Lankathas Pathmanathan

பாலியல் வன்முறைகளுடன் தொடர்புடைய பன்னாட்டுச் சட்ட அமுலாக்க நடவடிக்கையில் கனடியர்களும் அடக்கம்?

Lankathas Pathmanathan

Leave a Comment