தேசியம்
செய்திகள்

வாகனத் திருட்டு விசாரணையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது

Toronto காவல்துறையினரின் வாகனத் திருட்டு விசாரணையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் Service Ontario ஊழியர்களுடன் இணைந்து வாகன திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Project Safari என பெயரிடப்பட்ட இந்த விசாரணையில் சந்தேக நபர்கள் மீது 70 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவாகின.

Toronto  நகரம் முழுவதும் ஏராளமான வாகன திருட்டுகளுக்கு காரணமான சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய இந்த விசாரணை இந்த வருடம் February மாதம் ஆரம்பமானது.

இதில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை Toronto காவல்துறையினர் புதன்கிழமை (06) வெளியிட்டனர்.

கீர்த்தன் மங்களேஸ்வரன் (29 வயது)
கோபி யோகராஜா (2 வயது)
மிலோஷா ஆரியரத்தினம் (29 வயது)
கஜன் யோகநாயகம் (32 வயது)
Howard Lee (25 வயது)
Doneika Jackson (38 வயது)
Andrea Fernandes (30 வயது)

ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின.

இந்த விசாரணையில் மொத்தத்தில், $1.5 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டது.

இவர்களுக்கு எதிரான குயிற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Ontario மாகாணம் இந்த வாரம் மாகாண எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளது!

Gaya Raja

அவசரகாலச் சட்ட விசாரணையில் சாட்சியமளிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 26ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

thesiyam

Leave a Comment