தேசியம்
செய்திகள்

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது

Dominicaவில் நிகழ்ந்த Quebec தொழிலதிபரின் கொடூரமான மரணம் குறித்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Quebec தொழிலதிபர் Daniel Langlois, அவரது துணை Dominique Marchand ஆகியோர் Caribbean நாடான Dominicaவில் வெள்ளிக்கிழமை (01) சடலமாக மீட்கப்பட்டனர்.

Daniel Langlois அறக்கட்டளை இந்த இரண்டு இறப்புகளையும் உறுதிப்படுத்தியது

இந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் கைதான நான்கு சந்தேக நபர்கள் காவல்துறையினர் காவலில் உள்ளனர்.

இந்த கைதுகளை Dominic நீதி, குடிவரவு, தேசிய பாதுகாப்பு அமைச்சர் Rayburn Blackmoore உறுதிப்படுத்தினார்.

கைதானவர்களில் மூன்று வெளிநாட்டவர்களும் அடங்குவதாக அவர் கூறினார்

Related posts

Roxham வீதி எல்லையை மூடவேண்டும்: Quebec அரசாங்கம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

375க்கு மேற்பட்ட கனடியர்கள் சூடானில் இருந்து வெளியேறினர்

எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவி விலகுகிறார்!

Gaya Raja

Leave a Comment