தேசியம்
செய்திகள்

ஆயிரம் கனடியர்கள் இஸ்ரேலில் இருந்து ஆயுதப்படை விமானங்களில் வெளியேற்றம்

இஸ்ரேலில் இருந்து ஆயிரம் கனடியர்கள் இதுவரை கனேடிய ஆயுதப்படை விமானங்களில் வெளியேறியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (15) இரவு வரை, கனேடிய ஆயுதப்படையின் இராணுவ வான்வழி நடவடிக்கை மூலம் 1,000 கனடியர்கள், அவர்களது குடும்பத்தினர் இஸ்ரேலில் இருந்து Athens சென்றடைந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (12) முதல் இஸ்ரேலில் இருந்து நாளாந்தம் இரண்டு விமானங்கள் கனடியர்களை Tel Aviv விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றுகின்றது.

Greece நாட்டின் Athens நகரில் தரையிறங்கும் கனேடிய ஆயுதப்படை விமானங்களில் பயணிக்கும் கனடியர்கள் அங்கிருந்து, Air கனடா விமானத்தில் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

தேவை இருக்கும் வரை இந்த விமான சேவைகள் தொடரும் என கனடிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair கூறினார்

மொத்தம் 6,800 கனடியர்கள் இஸ்ரேலில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அவசர அழைப்புக்கு பதிலளிக்காத காவல்துறை – 21 வயது பெண் மரணம்!

Lankathas Pathmanathan

சூடானில் இருந்து கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறும் சந்தர்ப்பம் குறைகிறது

Prince Edward தீவு விவசாயிகளுக்கு 28 மில்லியன் டொலர் உதவி திட்டம்!

Lankathas Pathmanathan

Leave a Comment