தேசியம்
செய்திகள்

Naziகளுடன் இணைந்து போரிட்டவரை கெளரவித்ததற்கு ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு

Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியரை கெளரவித்ததற்கு கனடிய ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் Naziகளுடன் இணைந்து போராடிய ஒருவருக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்கு ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு கோரியுள்ளது.

Peter Savaryn என்பவருக்கு Order of Canada நியமனம் ஆளுநர் நாயகம் அலுவலகத்தால் 1987ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த நியமனத்திற்காக கனடியர்களிடம் மன்னிப்பு கோருகிறோம் என ஆளுநர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Peter Savaryn இரண்டாம் உலகப் போரில் Naziகளுடன் இணைந்து போரிட்டவர் என கூறப்படுகிறது.

இவருடன் இணைந்து Naziகளுக்காக போரிட்ட ஒருவரையே அண்மையில் கனடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

இந்த அங்கீகாரத்திற்காக கடந்த வாரம் பிரதமர் Justin Trudeau மன்னிப்பு கோரினார்.

தவிரவும் இதற்கு பொறுப்பேற்று நாடாளுமன்ற சபாநாயகர் Anthony Rota பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேலில் மூன்றாவது கனேடியர் பலி

Lankathas Pathmanathan

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வாசல் கதவில் சுற்றுலாப் பேருந்து மோதியது

கனடாவில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்ய புதிய அதிகாரங்களை வழங்கும் சட்டமூலம்

Lankathas Pathmanathan

Leave a Comment