தேசியம்
செய்திகள்

தமிழர் போட்டியிடும் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழக்கிழமை

Ontario மாகாணத்தில் இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வியாழக்கிழமை (27) நடைபெறுகிறது.

Torontoவில் Scarborough – Guildwood தொகுதியிலும், Ottawaவில் Kanata- Carleton தொகுதியிலும் இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழனன்று நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் Scarborough – Guildwood தொகுதியில் NDP சார்பில் தமிழ் வேட்பாளரான தட்ஷா நவநீதன் போட்டியிடுகின்றார்.

Ontario தேர்தல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இந்த இரண்டு Ontario  இடைத்தேர்தல்களில் தகுதியான வாக்காளர்களில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே முன்கூட்டிய வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர்.

Kanata-Carleton தொகுதியில் 7.34 சதவீதம் வாக்குகளும், Scarborough-Guildwood தொகுதியில் 3.6 சதவீதம் வாக்குகளும் முன்கூட்டிய வாக்களிப்பில் பதிவாகியுள்ளன

இந்த இரண்டு தொகுதிகளிலும் வியாழனன்று வாக்களிப்பு காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெறும்.

Kanata-Carleton தொகுதி கடந்த March மாதம் முதல் வெற்றிடமாக உள்ளது.

அந்த தொகுதியில் மாகாணசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த  Merrilee Fullerton திடீரென தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

Toronto நகர முதல்வர் இடை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது Scarborough-Guildwood தொகுதி மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகியிருந்தார்.

Related posts

100 நாட்களுக்குள் நகரசபை தேர்தல்

ரஷ்யாவின் போர்க் குற்ற விசாரணைகளை ஒருங்கிணைக்க G7 நாடுகளுடன் இணையும் கனடா

Lankathas Pathmanathan

மீண்டும் Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ள John Tory

Leave a Comment