தேசியம்
செய்திகள்

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்த மற்றொருவர் மரணம்

கடந்த வாரம் Manitobaவில் நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது.

கடந்த வாரம் வியாழக்கிழமை (15) பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களில் பெண் ஒருவர் செவ்வாய்கிழமை  (20) நேற்று சிகிச்சை பலனின்றி பலியானதாக RCMP புதன்கிழமை (21) அறிவித்தது.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முதலில் அறிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களில் ஒருவர் செவ்வாயன்று மரணமடைந்தார்.

இதன் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்தது.

இந்த விபத்து குறித்து RCMP தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

கனடிய முதற்குடியினருக்கும் போப் பாண்டவருக்கும் இடையில் இந்த வாரம் சந்திப்பு

Lankathas Pathmanathan

தமிழ்ச் சமூக மையத்திற்கு $460,000 நிதி உத்தரவாதம்

Lankathas Pathmanathan

ரஷ்யா, சீனா குறித்து NATO தலைவர் கனடாவை எச்சரித்தார்

Lankathas Pathmanathan

Leave a Comment