தேசியம்
செய்திகள்

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்த 6 பேர் தொடர்ந்து ஆபத்தான நிலையில்

Manitobaவில் வியாழக்கிழமை (15) நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 10 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (16) மாலை தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் ஆறு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் நான்கு பேர் அறுவை சிகிச்சை பிரிவில் பராமரிக்கப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் 60 முதல் 80 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது

Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து RCMP தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விபத்தில் பலியான 15 பேரின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் முயற்சியில் RCMP தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் அல்லது சூழ்நிலைகள் குறித்து கருத்து தெரிவிக்க RCMP மறுத்துள்ளது.

விசாரணை தொடரும் நிலையில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் சாத்தியமானவை என தெரியவருகிறது

Related posts

மனைவியை கொலை செய்ய கொலையாளியை பணி அமர்த்திய தமிழர்?

Lankathas Pathmanathan

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது: கனடிய நாடாளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

Brian Mulroneyயின் இறுதிச் சடங்கு விவரங்கள் வெளியாகின

Lankathas Pathmanathan

Leave a Comment