தேசியம்
செய்திகள்

Paul Bernardo அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்கு அனுப்புவது குறித்த கேள்விகளை தவிர்க்கும் அமைச்சர்

தொடர் கொலையாளி Paul Bernardo அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மீண்டும் அனுப்புவது குறித்த கேள்விகளை அமைச்சர் Marco Mendicino தவிர்த்தார்.

Paul Bernardo குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட சிறைக்கு மாற்றுவதற்கான சிறைத்துறையின் முடிவுக்காக அமைச்சர் Marco Mendicino ஏற்கனவே கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

Paul Bernardoவை குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட சிறைக்கு மாற்றும் கனடியச் சிறைச்சாலை முகவத்தின் முடிவை கனடியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino வியாழக்கிழமை (15) தெரிவித்தார்.

கனடியச் சிறைச்சாலை முகவத்தின் ஆணையருடன் உரையாடிய போது இந்த விடயத்தில் கனடியர்களின் அதிருப்தியை வெளியிட்டதாக அமைச்சர் கூறினார்.

ஆனாலும் மீண்டும் Paul Bernardoவை அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்கு அனுப்ப கனடியச் சிறைச்சாலை முகவத்திடம் வலியுறுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் தவிர்த்தார்.

Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் Marco Mendicino பொய் கூறுவதாக எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre தொடர்ந்தும் குற்றம் சாட்டுகின்றார்.

இந்த விடயத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது.

Related posts

தாயகத்தில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்: கரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கு விசா சேவைகளை நிறுத்திய இந்தியா!

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 27ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment