தேசியம்
செய்திகள்

Alberta காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல மாதங்கள் எடுக்கலாம்

காட்டுத்தீக்கு எதிரான Alberta மாகாணத்தின் போராட்டம் கோடை காலம் முழுவதும் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல மாதங்கள் ஆகலாம் என காட்டுத்தீ அதிகாரி எச்சரித்துள்ளார்.

சுமார் 2,500 தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

புதன்கிழமை (17) காலை வரை மாகாணம் முழுவதும் 96 காட்டுத்தீ முறையிடப்பட்டுள்ளது.

இவற்றில் வன பாதுகாப்பு பகுதிகளில் 91 தீ எரிகிறது.

27 காட்டுத்தீ கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.

இந்த வருடம் காட்டுத்தீ காரணமாக 694,000 hectares நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

காட்டுத்தீ காரணமாக இடம்பெயர்ந்த சில குடியிருப்பாளர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் வரை, 19,500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

Related posts

Terrebonne தேர்தல் முடிவை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

Lankathas Pathmanathan

வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது!

Lankathas Pathmanathan

மகளின் மரணம் தொடர்பான கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தாய் 

Lankathas Pathmanathan

Leave a Comment