தேசியம்
செய்திகள்

Quebec வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு படையினரை தேடும் பணி தொடர்கிறது

Quebec மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட இரண்டு  தீயணைப்பு படையினரை தேடும் பணி தொடர்கிறது.

காணாமல் போன இரண்டு  தீயணைப்பு படையினரை தேடும் பணி செவ்வாய்கிழமை (02) இரண்டாவது நாளாக தொடர்கிறது.

திங்கள்கிழமை (01) பிற்பகல் முதல் காணாமல் போன தீயணைப்பு படையினரை தேடும் பணி சிறப்பு வான், தரைவழி மீட்புக் குழுக்களினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

23 வயதான Christopher Lavoie, 50 வயதான Régis Lavoie ஆகியோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இருவரும் திங்களன்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Related posts

ஒன்பது பாலியல் துஷ்பிரயோக கோரிக்கை தீர்வுகளுக்கு 7.6 மில்லியன் டொலர்கள் வழங்கிய Hockey கனடா

Lankathas Pathmanathan

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

ஆறு மாத குழந்தைகளுக்கான COVID தடுப்பூசிக்கு Health கனடாவிடம் ஒப்புதல் கோரும் Moderna

Lankathas Pathmanathan

Leave a Comment