தேசியம்
செய்திகள்

April 1 அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிகரிக்கிறது.

April 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $16.65 உயர்கிறது.

2022ஆம் ஆண்டில் 6.8 சதவீதம் உயர்ந்த நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

மத்திய அரசாங்கம், 2021 ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்திற்கு $15 என்ற குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தது.

அதனை தொடர்ந்து பணவீக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசாங்கம் அதை அதிகரித்தும் வருகிறது

ஒவ்வொரு ஆண்டும் April 1ஆம் திகதி இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது

தற்போது குறைந்தபட்ச ஊதியம் $15.55 உள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts

Peel பிராந்திய பாடசாலைகள் நேரடி கல்விக்கு மூடப்படுகின்றன

Gaya Raja

July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்

Gaya Raja

மனித கடத்தல் விசாரணையில் இருவர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment